வரும் புத்தாண்டான ஜனவரி (2022)ல் தொடங்கி அந்த ஆண்டு முழுவதும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு குறித்த கால அட்டவணையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள 2022ம் ஆண்டுக்கான சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு மற்றும் சிறப்பு பூஜை நாட்கள் குறித்த கால அட்டவணையை விவரம் பின்வருமாறு:-
மாசி மாத பூஜைக்காக கோயில் நடை 2022-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி திறக்கப்பட்டு 17-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கோயில் நடை மார்ச் 8-ந்தேதி திறக்கப்பட்டு 19-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். மார்ச் 9-ந் தேதி திருவிழா கொடியேற்றம். 18-ந் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறும்.
சித்திரை மாத பூஜைகளுக்காக ஏப்ரல் 10-ந் தேதி நடை திறக்கப்பட்டு 18-ந் தேதி வரை சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடக்கும். 15-ந் தேதி விஷு பண்டிகை விழா நடக்கிறது.
வைகாசி மாத பூஜைக்காக மே 14-ந் தேதி நடை திறக்கப்பட்டு 19-ந் தேதி நடை அடைக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் விக்ரகம் நிறுவப்பட்ட நாளையொட்டி 8-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 9-ந் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஓணம் பண்டிகை:
ஆனி மாத பூஜைக்காக 2022 ஜூன் 14-ந் தேதி நடை திறக்கப்பட்டு 19-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு 21-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஆவணி மாத பூஜைக்காக ஆகஸ்டு 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு 21-ந் தேதி வரை பூஜைகள் நடக்கும்.
ஓணம் பண்டிகையையொட்டி செப்டம்பர் 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை பூஜைகள் நடக்கும்.
புரட்டாசி மாத பூஜைக்காக மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை செப்டம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டு 21-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் 17-ந் தேதி நடை திறக்கப்படும். 22-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
சித்திரை ஆட்ட விஷேச பூஜைக்காக மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அக்டோபர் 24-ந் தேதி திறக்கப்படும். 25-ந் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
மண்டல பூஜை:
2022-ம் ஆண்டின் மண்டல பூஜைக்காக நவம்பர் 16-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும். டிசம்பர் 27-ந் தேதி மண்டல பூஜை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
























