இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து, 105 ரூபாயை கடந்து சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து ஆறாவது நாளாக டீசலும் நூறு ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. இன்று டீசல் விலை 33 காசுகள் உயர்ந்துள்ளது.
பெட்ரோல்-டீசலுக்கான பயன்பாடு, கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்கள் படிப்படியாக மீண்டு வரும் நிலையில் அதிகரித்து வருகிறது. இதனால், கச்சா எண்ணெய்க்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் தேவை அதிகரிப்பு மற்றும் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. கணிசமான அளவுக்கு உற்பத்தியை பெரும்பாலான நாடுகள் அதிகரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
மத்திய-மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீது அதிக அளவில் வரி விதித்துள்ளன. இதுவும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. பெட்ரோல் விலை நாட்டின் அனைத்து பெரிய நகரங்களிலும் ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலையும் பல நகரங்களில் ரூ.100-ஐ கடந்து விற்பனையாகிறது.
இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து 105 ரூபாய் 13 காசுகளுக்கு சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து, 101 ரூபாய் 25 காசுகளுக்கு விற்பனையாகிறது.
























