மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியை அடைந்து சாதனை படைத்துள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் 5.4 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது 53.84 லட்சம் கொரோனா தடுப்பூசி தமிழகத்தின் கையிருப்பில் இருக்கிறது.
முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய பலர், 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்டு இருந்தாலும், கொரோனா தடுப்பு வழிமுறைகளையும் மக்கள் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்.’ எனத் தெரிவித்தார்.
























