• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
4thetamil.in
  • முகப்பு
  • செய்திகள்
    • All
    • Latest News
    • இந்தியா
    • உலகம்
    • சுற்றுச்சூழல்
    • தமிழ்நாடு
    • தொழில்நுட்பம்
    அரிட்டாப்பட்டிக்கு வெண்ணெய் ! பரந்தூருக்கு சுண்ணாம்பா?

    அரிட்டாப்பட்டிக்கு வெண்ணெய் ! பரந்தூருக்கு சுண்ணாம்பா?

    அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் இவரா? அப்படினா ஜெகத்ரட்சகன் ஒரம்கட்டப்படுகிறாரா?

    அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் இவரா? அப்படினா ஜெகத்ரட்சகன் ஒரம்கட்டப்படுகிறாரா?

    பாடலாசிரியர்கள் இங்கு முழுமையான சுதந்திர உணர்வுடன் எழுத முடிவதில்லை – ட்ரெண்டிங் கவிஞர் அ.ப. இராசா பளீர் பேட்டி

    பாடலாசிரியர்கள் இங்கு முழுமையான சுதந்திர உணர்வுடன் எழுத முடிவதில்லை – ட்ரெண்டிங் கவிஞர் அ.ப. இராசா பளீர் பேட்டி

    அதிமுக – பாஜக கூட்டணி முறிவு : உண்மை பின்னணி என்ன? – மூத்த பத்திரிகையாளர் திரு. பெலிக்ஸ் ஜெரால்டு நேர்காணல்

    அதிமுக – பாஜக கூட்டணி முறிவு : உண்மை பின்னணி என்ன? – மூத்த பத்திரிகையாளர் திரு. பெலிக்ஸ் ஜெரால்டு நேர்காணல்

    எரிமலைகளால் சூழப்பட்டுள்ள புதிய கோள் கண்டுபிடிப்பு!

    எரிமலைகளால் சூழப்பட்டுள்ள புதிய கோள் கண்டுபிடிப்பு!

    ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கும் மெட்டாவின் புதிய செயலி!

    ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கும் மெட்டாவின் புதிய செயலி!

    Trending Tags

    • Trump Inauguration
    • United Stated
    • White House
    • Market Stories
    • Election Results
  • சினிமா
    பாடலாசிரியர்கள் இங்கு முழுமையான சுதந்திர உணர்வுடன் எழுத முடிவதில்லை – ட்ரெண்டிங் கவிஞர் அ.ப. இராசா பளீர் பேட்டி

    பாடலாசிரியர்கள் இங்கு முழுமையான சுதந்திர உணர்வுடன் எழுத முடிவதில்லை – ட்ரெண்டிங் கவிஞர் அ.ப. இராசா பளீர் பேட்டி

    ஹீரோவாக ஜெயித்தாரா அர்ஜுன் தாஸ்? வசந்த பாலனின் அநீதி எப்படி இருக்கு? – திரை விமர்சனம்

    ஹீரோவாக ஜெயித்தாரா அர்ஜுன் தாஸ்? வசந்த பாலனின் அநீதி எப்படி இருக்கு? – திரை விமர்சனம்

    மாவீரன் திரைவிமர்சனம்

    மாவீரன் திரைவிமர்சனம்

    பாபா பிளாக் ஷீப் திரைவிமர்சனம்

    பாபா பிளாக் ஷீப் திரைவிமர்சனம்

    பிச்சைக்காரன் 2 மக்களை கவர்ந்ததா? – திரை விமர்சனம்.

    பிச்சைக்காரன் 2 மக்களை கவர்ந்ததா? – திரை விமர்சனம்.

    ‘விஜய்68’ படத்தை இயக்கும் வெங்கட் பிரபு; வெளியாகியிருக்கும் ’வாவ்’ அப்டேட்!

    ‘விஜய்68’ படத்தை இயக்கும் வெங்கட் பிரபு; வெளியாகியிருக்கும் ’வாவ்’ அப்டேட்!

    Trending Tags

    • Nintendo Switch
    • CES 2017
    • Playstation 4 Pro
    • Mark Zuckerberg
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • லைப்ஸ்டைல்
    • All
    • உணவு
    • ஃபிட்னஸ்
    • பயணம்
    திரும்பப் பெறப்படும் Cadbury சாக்லெட் தயாரிப்புகள்; வைரஸ் பரவல் காரணமா?

    திரும்பப் பெறப்படும் Cadbury சாக்லெட் தயாரிப்புகள்; வைரஸ் பரவல் காரணமா?

    உணவு உண்ணும்போது செல்போன் பயன்படுத்த தடைவிதித்த ஜப்பானிய உணவகம்.

    உணவு உண்ணும்போது செல்போன் பயன்படுத்த தடைவிதித்த ஜப்பானிய உணவகம்.

    பலூன் மீனை உட்கொண்ட மனைவி உயிரிழப்பு; கோமா நிலையில் கணவர்!

    பலூன் மீனை உட்கொண்ட மனைவி உயிரிழப்பு; கோமா நிலையில் கணவர்!

    1 வருடத்தில் ரூ.6 லட்சத்திற்கு ஸ்விக்கியில் இட்லி ஆர்டர் செய்த நபர்!

    1 வருடத்தில் ரூ.6 லட்சத்திற்கு ஸ்விக்கியில் இட்லி ஆர்டர் செய்த நபர்!

    காதல் செய்வீர்!

    காதல் செய்வீர்!

    தீபாவளி அன்று இறைச்சிக்கடைகளை திறக்க அனுமதி. ஜெயின் வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள இறைச்சி கடைகள் மட்டும் மூடியிருக்கும் – தமிழ்நாடு அரசு

    Trending Tags

    • Golden Globes
    • Game of Thrones
    • MotoGP 2017
    • eSports
    • Fashion Week
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • All
    • Latest News
    • இந்தியா
    • உலகம்
    • சுற்றுச்சூழல்
    • தமிழ்நாடு
    • தொழில்நுட்பம்
    அரிட்டாப்பட்டிக்கு வெண்ணெய் ! பரந்தூருக்கு சுண்ணாம்பா?

    அரிட்டாப்பட்டிக்கு வெண்ணெய் ! பரந்தூருக்கு சுண்ணாம்பா?

    அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் இவரா? அப்படினா ஜெகத்ரட்சகன் ஒரம்கட்டப்படுகிறாரா?

    அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் இவரா? அப்படினா ஜெகத்ரட்சகன் ஒரம்கட்டப்படுகிறாரா?

    பாடலாசிரியர்கள் இங்கு முழுமையான சுதந்திர உணர்வுடன் எழுத முடிவதில்லை – ட்ரெண்டிங் கவிஞர் அ.ப. இராசா பளீர் பேட்டி

    பாடலாசிரியர்கள் இங்கு முழுமையான சுதந்திர உணர்வுடன் எழுத முடிவதில்லை – ட்ரெண்டிங் கவிஞர் அ.ப. இராசா பளீர் பேட்டி

    அதிமுக – பாஜக கூட்டணி முறிவு : உண்மை பின்னணி என்ன? – மூத்த பத்திரிகையாளர் திரு. பெலிக்ஸ் ஜெரால்டு நேர்காணல்

    அதிமுக – பாஜக கூட்டணி முறிவு : உண்மை பின்னணி என்ன? – மூத்த பத்திரிகையாளர் திரு. பெலிக்ஸ் ஜெரால்டு நேர்காணல்

    எரிமலைகளால் சூழப்பட்டுள்ள புதிய கோள் கண்டுபிடிப்பு!

    எரிமலைகளால் சூழப்பட்டுள்ள புதிய கோள் கண்டுபிடிப்பு!

    ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கும் மெட்டாவின் புதிய செயலி!

    ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கும் மெட்டாவின் புதிய செயலி!

    Trending Tags

    • Trump Inauguration
    • United Stated
    • White House
    • Market Stories
    • Election Results
  • சினிமா
    பாடலாசிரியர்கள் இங்கு முழுமையான சுதந்திர உணர்வுடன் எழுத முடிவதில்லை – ட்ரெண்டிங் கவிஞர் அ.ப. இராசா பளீர் பேட்டி

    பாடலாசிரியர்கள் இங்கு முழுமையான சுதந்திர உணர்வுடன் எழுத முடிவதில்லை – ட்ரெண்டிங் கவிஞர் அ.ப. இராசா பளீர் பேட்டி

    ஹீரோவாக ஜெயித்தாரா அர்ஜுன் தாஸ்? வசந்த பாலனின் அநீதி எப்படி இருக்கு? – திரை விமர்சனம்

    ஹீரோவாக ஜெயித்தாரா அர்ஜுன் தாஸ்? வசந்த பாலனின் அநீதி எப்படி இருக்கு? – திரை விமர்சனம்

    மாவீரன் திரைவிமர்சனம்

    மாவீரன் திரைவிமர்சனம்

    பாபா பிளாக் ஷீப் திரைவிமர்சனம்

    பாபா பிளாக் ஷீப் திரைவிமர்சனம்

    பிச்சைக்காரன் 2 மக்களை கவர்ந்ததா? – திரை விமர்சனம்.

    பிச்சைக்காரன் 2 மக்களை கவர்ந்ததா? – திரை விமர்சனம்.

    ‘விஜய்68’ படத்தை இயக்கும் வெங்கட் பிரபு; வெளியாகியிருக்கும் ’வாவ்’ அப்டேட்!

    ‘விஜய்68’ படத்தை இயக்கும் வெங்கட் பிரபு; வெளியாகியிருக்கும் ’வாவ்’ அப்டேட்!

    Trending Tags

    • Nintendo Switch
    • CES 2017
    • Playstation 4 Pro
    • Mark Zuckerberg
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • லைப்ஸ்டைல்
    • All
    • உணவு
    • ஃபிட்னஸ்
    • பயணம்
    திரும்பப் பெறப்படும் Cadbury சாக்லெட் தயாரிப்புகள்; வைரஸ் பரவல் காரணமா?

    திரும்பப் பெறப்படும் Cadbury சாக்லெட் தயாரிப்புகள்; வைரஸ் பரவல் காரணமா?

    உணவு உண்ணும்போது செல்போன் பயன்படுத்த தடைவிதித்த ஜப்பானிய உணவகம்.

    உணவு உண்ணும்போது செல்போன் பயன்படுத்த தடைவிதித்த ஜப்பானிய உணவகம்.

    பலூன் மீனை உட்கொண்ட மனைவி உயிரிழப்பு; கோமா நிலையில் கணவர்!

    பலூன் மீனை உட்கொண்ட மனைவி உயிரிழப்பு; கோமா நிலையில் கணவர்!

    1 வருடத்தில் ரூ.6 லட்சத்திற்கு ஸ்விக்கியில் இட்லி ஆர்டர் செய்த நபர்!

    1 வருடத்தில் ரூ.6 லட்சத்திற்கு ஸ்விக்கியில் இட்லி ஆர்டர் செய்த நபர்!

    காதல் செய்வீர்!

    காதல் செய்வீர்!

    தீபாவளி அன்று இறைச்சிக்கடைகளை திறக்க அனுமதி. ஜெயின் வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள இறைச்சி கடைகள் மட்டும் மூடியிருக்கும் – தமிழ்நாடு அரசு

    Trending Tags

    • Golden Globes
    • Game of Thrones
    • MotoGP 2017
    • eSports
    • Fashion Week
No Result
View All Result
4thetamil.in
No Result
View All Result
Home செய்திகள்

மீனவர் ராஜ்கிரண் படுகொலைக்கு மத்திய, மாநில அரசுகளின் கையாலாகாத்தனமே காரணம்! – சீமான் கடும் கண்டனம்

Editor Desk by Editor Desk
October 20, 2021
in செய்திகள், தமிழ்நாடு
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நேற்று புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். திருமணம் ஆகி 40 நாட்களே ஆன நிலையில் மீனவர் ராஜ்கிரன் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு தமிழ்நாட்டில் பெரும் கொதிப்பலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய மாநில அரசுகளின் கையாலாகத்தனமே இதற்கு காரணம் எனக் குற்றம் சாட்டிக் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர் ராஜ்கிரண்

மீன்பிடி படகினை தாக்கி புதுக்கோட்டை மீனவர் ராஜ்கிரணை நடுக்கடலில் மூழ்கடித்துப் பச்சைப் படுகொலை செய்த இலங்கை கடற்படையின் இனவெறி அட்டூழியச் செயலானது பொறுக்கவியலா கடும் ஆத்திரத்தையும், பெரும் மனவேதனையும் அளிக்கிறது. தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறி, மீனவர்கள் உயிரிழக்கக் காரணமான மத்திய மாநில அரசுகளின் அலட்சியப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழர்களுக்குச் சொந்தமான கட்சத்தீவைஇந்திய அரசு இலங்கைக்குத் தாரைவார்த்த காலம் தொட்டே, இலங்கை கடற்படையால் தமிழர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் செயல்கள் தொடங்கிவிட்டன. 2009 ஆம் ஆண்டு ஈழ விடுதலை போராட்டத்தை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் துணையுடன் இரண்டு இலட்சம் தமிழர்களைப் படுகொலை செய்து, இலங்கை இனவெறி அரசு ஒடுக்கிய பிறகு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும், கைதுகளும், படகுகள், வலைகள் உள்ளிட்ட உடைமைகளை பறித்து வைத்துக்கொள்வதும் நாளுக்குநாள் அதிகரித்து வந்த வண்ணமேயுள்ளன. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்களை சிங்கள இனவெறி இராணுவம் சிறைபிடிப்பது, கொலைவெறித் தாக்குதல் நடத்துவது, படகுகள், மீன்களை பறித்துக்கொள்வது, உடைமைகளை அபகரித்துக்கொள்வது, , வலைகள், படகுகளைச் சேதப்படுத்துவது, துப்பாக்கிச்சூடு நடத்துவது, என அரங்கேற்றிய கொடுமைகள் சொல்லி மாளக்கூடியதல்ல.

மத்தியில் காங்கிரசு ஆண்டபோதும் , அதன் பிறகான பாஜக ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்துவரும் தமிழக மீனவர்கள் தாக்குதல்களை நிறுத்த, அணுவளவும் ஆட்சியாளர்கள் முயற்சி செய்ததில்லை. அதன் நீட்சியாகத் தற்போது புதிதாகத் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகும் ‘ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை’ என்பதற்கேற்ப மீனவர்கள் மீதான கொடுந்தாக்குதலானது நின்றபாடில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் எந்த ஆட்சி வந்தாலும், அதிகார மாற்றம் எத்தனை முறை நிகழ்ந்தாலும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதல்கள் மட்டும் தொடர்கதையாக மாறி வருவதும், அதற்கு எவ்வித எதிர்வினையுமாற்றாது ஆளும் ஆட்சியாளர்கள், ஒப்புக்கு கடிதம் எழுதிவிட்டு கடமை முடிந்ததாய் அமைதியாகக் கடந்துபோவதும் தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. சிங்களப்பேரினவாத அரசு ஈவிரக்கமற்று தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், சொல்லொணாத் துயரங்களுக்கு ஆட்படுத்தி வன்முறையிலும், அத்துமீறல்களிலும் ஈடுபட்டு வருவதும் தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடேயாகும்.

தமிழர்களை மிக இழிவாகக் கருதி, அவர்களது உயிர், உடைமைகள், உரிமைகள் ஆகியவை குறித்து எவ்வித அக்கறையுமற்ற நிலையை முன்னெடுத்து, சிங்களப் பேரினவாதத்தைக் கண்டிக்க மறுத்து, அவர்களுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வரும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் கொடுங்கோல் ஆட்சிமுறையும், அலட்சியப்போக்குமே இத்தாக்குதல்களுக்குக் காரணமாகும். மேலும் கடந்த மே மாதம் திமுக அரசு பொறுப்பேற்றபோதே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீது கொடுந்தாக்குதலை நடத்திய இலங்கை கடற்படை, கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடும் , கொலைவெறித் தாக்குதலும் நடத்தியது.

இந்நிலையில் கடந்த வாரம் மீண்டும் இலங்கை கடற்படையால் 23 நாகை மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். அப்போதே மத்திய அரசிற்கு உரிய அழுத்தத்தைக் கொடுத்து இலங்கை இனவாத அரசிற்கு உரிய நெருக்கடியை கொடுக்கத் தவறிய திமுக அரசின் அலட்சியமும், செயல்படாத்தன்மையுமே தற்போது மீனவர் ராஜ்கிரண் படுகொலை செய்யப்பட முக்கியக் காரணமாகும். எண்ணூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் துள்ளத்துடிக்கப் படுகொலை செய்யப்பட்டும், ஆயிரக்கணக்கான மீனவர்கள் உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்தும், தமிழக மீனவர்களின் பல கோடிக்கணக்கான சொத்துகள் சூறையாடப்பட்டபோதும் நாட்டையாளும் ஆட்சியாளர்கள் அதனைத் துளியும் பொருட்படுத்துவதுமில்லை; எவ்வித எதிர்வினைகள் ஆற்றுவதுமில்லை.

உலகில் எந்த ஒரு நாடும் தனது நாட்டுக் குடிகள், அந்நிய நாட்டு இராணுவத்தால் தாக்கப்படுவதை இப்படிச் சகித்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிராது. இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் உலகின் நான்காவது மிகப்பெரிய இராணுவத்தை வைத்துள்ள இந்திய அரசு, இலங்கை அரசுக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்காது அமைதி காப்பது சொந்த நாட்டு மீனவர்களின் உயிர்களைக் கிள்ளுக்கீரையாக எண்ணும் அலட்சிய மனப்பான்மையின் வெளிப்பாடாகும். இலங்கை அரசைக் கண்டிக்காது, ஒன்றிய அரசு கடைப்பிடிக்கும் வஞ்சக அமைதி என்பது இந்நாட்டின் குடிமக்களாகிய தமிழர்களுக்கு இழைத்திடும் பச்சைத்துரோகமாகும். சொந்த நாட்டு மக்களை இப்படிச் சாகக் கொடுத்து வஞ்சித்து, அதற்கு இலங்கை நட்பு நாடு எனக் காரணம் காட்டுவது இந்நாட்டின் இறையாண்மையைப் பறிகொடுத்திடும் கொடுஞ்செயலாகும்.

ஆகவே, இதுபோல இனி ஒரு மீனவரின் உயிர் பறிக்கப்படாமல் தடுக்க வேண்டியது ஒன்றிய, மாநில அரசுகளின் பொறுப்பும் கடமையும் என்பதை இனியாவது உணர்ந்து இலங்கை அரசுடனான அரசியல் மற்றும் வர்த்தக உறவை உடனடியாக இந்திய அரசு துண்டிக்க வேண்டும். தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு நாடாளுமன்றத்தில் தனக்குள்ள எண்ணிக்கை பலத்தைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு மூலம் தமிழ்நாடு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதோடு, உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை விரைவுபடுத்திக் கட்சத்தீவை மீட்க உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்த தம்பி இராஜ்கிரண் குடும்பத்திற்கு உரிய நிதியுதவியும், சிறைபட்ட மீனவர்களை விரைந்து சிறைமீட்க வேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளும் அளிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags: Indian GovernmentSeemanSrilankan NavystalinTN Fisherman Killed by Lankan Navyதமிழக மீனவர்மீனவர் படுகொலைமோடிஸ்டாலின்
Previous Post

கேரளாவில் கனமழை ~ செர்தோணி அணையில் நீர் திறப்பு

Next Post

தமிழகத்திற்கு மிகக் கனமழை அலெர்ட் : வருவாய் – பேரிடர் மேலாண்மை துறை முன்னெச்சரிக்கை!

Editor Desk

Editor Desk

Next Post

தமிழகத்திற்கு மிகக் கனமழை அலெர்ட் : வருவாய் - பேரிடர் மேலாண்மை துறை முன்னெச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
நாயுடன் உடலுறவு கொள்ளும் வீடியோவை வலைதளத்தில் பதிவேற்றிய பெண்!

நாயுடன் உடலுறவு கொள்ளும் வீடியோவை வலைதளத்தில் பதிவேற்றிய பெண்!

April 7, 2023
’2 படம் ஹிட்டுனா மரியாதை போயிருமா?’ திட்டி தீர்க்கப்படும் பிரதீப் ரங்கநாதன்!

’2 படம் ஹிட்டுனா மரியாதை போயிருமா?’ திட்டி தீர்க்கப்படும் பிரதீப் ரங்கநாதன்!

April 4, 2023
கோவையைக் கலக்கிவரும் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா!

கோவையைக் கலக்கிவரும் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா!

April 1, 2023
’ஹீரோவைப் போல் இதன் இயக்குநரும் வேசி மகனா?’ – புர்கா படத்தால் கொதிக்கும் இஸ்லாமியர்கள்!

’ஹீரோவைப் போல் இதன் இயக்குநரும் வேசி மகனா?’ – புர்கா படத்தால் கொதிக்கும் இஸ்லாமியர்கள்!

April 18, 2023

Udhayanidhi Pudhukottaiக்கு ஏன் போகல? | Seeman Vote Bank 15% ஆக உயரும் | Journalist Mani Interview

0

மோடியின் அவலமான செயல் – Journalist Mani Latest Interview | 4th E Tamil 

0

Seeman Stalinஐ எதிர்த்து நிக்கணும் – Raveendran Duraisamy Latest Interview 

0

யுவன் எனும் தமிழ்த்திரை இசையின் இளவரசன்

0
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: ஒரு அலசல்

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: ஒரு அலசல்

May 31, 2025
அரிட்டாப்பட்டிக்கு வெண்ணெய் ! பரந்தூருக்கு சுண்ணாம்பா?

அரிட்டாப்பட்டிக்கு வெண்ணெய் ! பரந்தூருக்கு சுண்ணாம்பா?

December 13, 2024
அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் இவரா? அப்படினா ஜெகத்ரட்சகன் ஒரம்கட்டப்படுகிறாரா?

அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் இவரா? அப்படினா ஜெகத்ரட்சகன் ஒரம்கட்டப்படுகிறாரா?

February 15, 2024
வியர்வைத் துளிகள் எரிபொருளாகட்டும்-கட்சி தொண்டர்ளுக்கு தமிமுன் அன்சாரி கடிதம்…!

வியர்வைத் துளிகள் எரிபொருளாகட்டும்-கட்சி தொண்டர்ளுக்கு தமிமுன் அன்சாரி கடிதம்…!

October 17, 2023

Recent News

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: ஒரு அலசல்

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: ஒரு அலசல்

May 31, 2025
அரிட்டாப்பட்டிக்கு வெண்ணெய் ! பரந்தூருக்கு சுண்ணாம்பா?

அரிட்டாப்பட்டிக்கு வெண்ணெய் ! பரந்தூருக்கு சுண்ணாம்பா?

December 13, 2024
அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் இவரா? அப்படினா ஜெகத்ரட்சகன் ஒரம்கட்டப்படுகிறாரா?

அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் இவரா? அப்படினா ஜெகத்ரட்சகன் ஒரம்கட்டப்படுகிறாரா?

February 15, 2024
வியர்வைத் துளிகள் எரிபொருளாகட்டும்-கட்சி தொண்டர்ளுக்கு தமிமுன் அன்சாரி கடிதம்…!

வியர்வைத் துளிகள் எரிபொருளாகட்டும்-கட்சி தொண்டர்ளுக்கு தமிமுன் அன்சாரி கடிதம்…!

October 17, 2023
4thetamil.in

4thetamil is a media company with a vision to connect locally and reach globally with informative and entertaining news. We commit to create quality and creative content, Latest News, expert analysis, Trending articles, Video documentary, Event management from around the country which brings value to everyone

Follow Us

Browse by Category

  • Latest News
  • Uncategorized
  • அழகுக்குறிப்புகள்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உணவு
  • உலகம்
  • ஃபிட்னஸ்
  • சினிமா
  • சுற்றுச்சூழல்
  • செய்திகள்
  • சென்னை
  • டிரெண்டிங்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • தொழில்நுட்பம்
  • பயணம்
  • மருத்துவம்
  • லைப்ஸ்டைல்
  • விளையாட்டு
  • வீடியோ

Recent News

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: ஒரு அலசல்

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: ஒரு அலசல்

May 31, 2025
அரிட்டாப்பட்டிக்கு வெண்ணெய் ! பரந்தூருக்கு சுண்ணாம்பா?

அரிட்டாப்பட்டிக்கு வெண்ணெய் ! பரந்தூருக்கு சுண்ணாம்பா?

December 13, 2024
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2023 -Developed and Maintained by BridgeE.

No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சுற்றுச்சூழல்
    • விளையாட்டு
    • வணிகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • லைப்ஸ்டைல்
    • உணவு
    • ஃபிட்னஸ்
    • பயணம்

© 2023 -Developed and Maintained by BridgeE.