முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2020-21 ஆம் ஆண்டுக்கான சம்பா பயிர் காப்பீட்டின் பேரில் இழப்பீட்டுத் தொகை ரூ.1,597.18 கோடியை 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். சென்னை, தலைமை செயலகத்தில் 10 விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார், முதலமைச்சர்.
முன்னதாக ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகம் சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களையும் முதல்-அமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து முட்டுக்காட்டில் ரூ.8.80 கோடியில் மீன்வளர்ப்பு தொழில் நுட்ப தொழில்சார் கல்வி நிலைய கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.
மேலும் திருச்சி ஜீயபுரத்தில் ரூ.3.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வளங்குன்றா நீர் உயிர் வளர்ப்பு மையத்திற்கான கட்டிடத்தையும் திறந்து வைத்தார் முதல்வர். அதன்பிறகு, ஓசூர் கால் நடைப்பண்ணையில் ரூ.6.75 கோடியில் நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகத்தையும் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
























