சென்னை கோயம்பேடு சந்தையில் விற்கப்படும் தக்காளியின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை கோயம்பேடு சந்தை நிலவரப்படி கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி
10 முதல் 15 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 40 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. பெங்களூரு தக்காளியின் விலை கிலோ 70 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. தென்மாநிலங்களில் மழைப்பொழிவு அதிகரித்திருப்பதன் விளைவாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பற்றாக்குறை காரணமாக விலை அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தக்காளியைப் போலவே வெங்காயத்தின் விலையும் 10 ரூபாய் அதிகரித்துள்ளது. 35 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ தற்போது 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் இருந்து வரும் வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஏற்றுமதி அதிகரித்திருப்பதன் விளைவாக வெங்காயத்தி விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலை நீடித்தால் வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாயை தொடும் என்று கூறப்படுகிறது.
























