இன்று அதிகாலை 3.30 மணியளவில், பாகிஸ்தான் நாட்டின் தெற்கே ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் திடீரென குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

பேரிடர் மேலாண் அதிகாரிகள் முதலில், “பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 15 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்” என தெரிவித்தனர். பேரிடர் மேலாண் கழக இயக்குனர் ஜெனரல் நசீர் கூறும்போது, “பாகிஸ்தானின் தெற்கே இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 20 பேர் உயிரிழந்து உள்ளனர். 200 பேர் காயமடைந்து உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
























