தமிழகத்தின் ஊரக உள்ளாட்சித் தோ்தல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாளையும் 2ம் கட்ட தேர்தல் அக்டோபர் 9ம் தேதியும் நடைபெறுகிறது.
தமிழக அரசு, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்கள் மற்றும் தற்செயல் தேர்தல் நடைபெறும் 28 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் பொது விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் மதுக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் 4 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அந்தந்த மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், தேர்தல் வாக்குசாவடி மையங்களாக செயல்படவுள்ளதாலும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்லவுள்ளதாலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் நாட்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
























