நேற்று உத்திர பிரதேசத்தில், விவசாயிகள் போராட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியானார்கள். இந்த வன்முறை சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள் பலர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் நடந்த இவ்வன்முறை சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில்,
“உ.பி. விவசாயிகள் போராட்டத்தில் 8 விவசாயிகள் உயிரிழந்த நிகழ்வு துயரமளிக்கிறது. கோரிக்கை வைக்கவே உயிரிழக்க வேண்டும் என்ற நிலைமை கொடுமை. அதை வெளியுலகம் அறியக்கூடாது என எண்ணுவது உ.பி. அரசின் மூர்க்கம்” என்று தெரிவித்துள்ளார்.
























