அமெரிக்க ராணுவம், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறத் துவங்கியதும், கடந்த ஆகஸ்ட் 15 ந்தேதி தலீபான்கள் நாட்டை கைப்பற்றினர். காபூல் விமான நிலையத்தை மட்டும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்க ராணுவம், ஆகஸ்ட்30-ம் தேதி அங்கிருந்தும் வெளியேறியது. அங்கு குறைந்த அளவிலான விமானங்களே இயக்கப்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானுக்கான வழக்கமான அனைத்து வர்த்தக விமான சேவைகளையும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குப் பிறகு இந்தியா நிறுத்தி இருந்தது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கக்கோரி, இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) தலீபான் அரசு கடிதம் எழுதியுள்ளது. தற்போது இக்கடிதம் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
























