அதிக நேரம் ஆன்லைன் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் நெல்லை மாணவர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மன்னார்புரத்தைச் சேர்ந்தவர் வள்ளிமயில். இவருக்கு 2 மகன்களும் 1 மகளும் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் சஞ்சய் (வயது 15) மன்னார்புரம் அருகில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் தனத் செல்போனில் நீண்ட நேரம் ஆன்லைன் கேமான ஃப்ரீ ஃபயர் கேம் விளையாடி வந்துள்ளார். அந்த விளையாட்டுக்கு அடிமையாகி விட்ட அவரை சஞ்சயின் தாயார் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன் சஞ்சய் பெற்றோர் இல்லாத நேரத்தில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து திசையன்விளை காவல்துறையினர் சஞ்சயின் உடலை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இத்தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் கேம்களுக்கு குழந்தைகள் அடிமையாவதன் கொடூர விளைவுகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே வருகிறது.
























