குற்றாலம், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகள் எப்போது திறக்கப்படும் என்பதை சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. சினிமா திரையரங்குகள், மால்கள், பொழுது போக்கு இடங்கள், சுற்றுலா தலங்கள் போன்றவற்றிற்கு அனுமதி அளித்தாலும், நீர்வீழ்ச்சிகளில் மட்டும் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படாமலே இருந்து வந்தது.
தற்போது, குற்றாலம் மற்றும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளை பொதுமக்கள் குளிக்க திறக்கப்படுவது குறித்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறுகையில், ”வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.
தென்னகத்தின் ’ஸ்பா’ என வர்ணிக்கப்படும் குற்றாலம் நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.
























