கரூரில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது மகளிர் நீதிமன்றம்.
கடந்த 2019ஆம் ஆண்டு, கரூரில் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய 3ம் வகுப்பு சிறுமியை, 40 வயதான சரவணன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த வழக்கு இத்தனை ஆண்டுகளாகக் கரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி நசீமா பானு, குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தார்.
























