கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் நேற்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, , இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு விலகுவதாக அறிவித்த கோலி, தற்போது ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் இந்த சீசனுடன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
Virat Kohli to step down from RCB captaincy after #IPL2021
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 19, 2021
“This will be my last IPL as captain of RCB. I’ll continue to be an RCB player till I play my last IPL game. I thank all the RCB fans for believing in me and supporting me.”: Virat Kohli#PlayBold #WeAreChallengers pic.twitter.com/QSIdCT8QQM
இது தொடர்பாக விராட் கோலி வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, “ ஆர்சிபி அணியின்
கேப்டனாக இதுதான் எனது கடைசி சீசன். ஆனால் தொடர்ந்து ஆர்சிபி அணியில் ஒருவீரராக நான்
எனது கடைசி ஐபிஎல் வரை விளையாடுவேன்.
இதுதொடர்பாக அணி வீரர்களிடம் பேசியிருக்கிறேன், என்னுடைய பணிச்சுமை காரணமாக சமீபத்தில் டி20 கேப்டன் பதவியிலிருந்தும் விலகினேன். எனது முடிவையும் நிர்வாகத்திடம் தெளிவுபடுத்தி, ஆர்சிபி வீரராகத் தொடர்வேன் எனத் தெரிவித்துவிட்டேன்.
இது என் பயணத்தில் சிறிய நிறுத்தம்தான் முடிவு அல்ல, பயணம் தொடரும்.இந்த வாய்ப்பை வழங்கிய ஆர்சிபி நிர்வாகம், பயிற்சியாளர்கள், ஊழியர்கள், வீரர்கள், ஆர்சிபி ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. ” எனத் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தலைமையில் ஆர்சிபி அணி 132 போட்டிகளில் 62 வெற்றிகள், 65 தோல்விகள், 3 போட்டிகள் டையிலும், 4 போட்டிகள் முடிவில்லாமலும் இருக்கிறது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்டுள்ள பெங்களூரு அணி இதுவரை கோப்பை வெல்லாததற்கு கோலியின் மோசமான கேப்டன்ஷிப் தான் காரணம் எனக் கூறப்பட்டு வந்தது.
2013ம் ஆண்டு விராட் கோலி ஆர்.சி.பி அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற பின் ஆர்சிபி அணி ஒருமுறை மட்டும் தான் இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளது. மேலும், 2016ம் ஆண்டு நீங்கலாக விராட் கோலி பேட்டிங்கில் பெரிதளவில் சோபிக்கவில்லை. இவற்றை மனதில் கொண்டு தான் ஆர்.சி.பி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியதாக கூறப்படுகிறது.

ஆர்.சி.பி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகுவது ஆர்.சி.பி அணி
ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளது. இதனால் இந்தாண்டு நிச்சயம் கோப்பையை பெங்களூர் அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
























