நீட் நுழைவுத்தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.
இந்த மசோதா குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர் “நீட் நுழைவுத்தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும்படியாக சட்ட மசோதா இருக்கும். நீட் தேர்வினை திமுக தொடக்கம் முதலே எதிர்த்து வரும் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தை கையிலெடுத்துள்ளது. இந்த அறப்போராட்டத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தரவேண்டும். 12 ஆம் வகுப்பு மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து மருத்துவக் கல்விக்கு தேர்வு செய்யும்படியான முயற்சிகளளை மேற்கொண்டு வருகிறோம்.” என்று கூறினார்.
























