இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2-1 என்கிற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) மான்செஸ்டரில் தொடங்குகிறது.

கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. குழந்தை பிறந்ததால் 4-வது டெஸ்டில் விடுவிக்கப்பட்ட விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் மீன்டும் இங்கிலாந்து அணிக்கு திரும்பியுள்ளார்.
இதேபோல் சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் அழைக்கப்பட்டு இருக்கிறார். மான்செஸ்டர் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், ஜேக் லீச் சேர்க்கப்பட்டுள்ளார்.

மான்செஸ்டரில் நடக்கும் கடைசி டெஸ்டையும் வென்றாலோ, அல்லது குறைந்தபட்சம் டிரா செய்தாலே இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்கும். தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்ய கடைசி டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
இங்கிலாந்து அணி :- ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், பேர்ஸ்டோ, ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கர்ரன், ஹசீப் ஹமீத், லாரன்ஸ், ஜாக் லீச், டேவிட் மலான், கிரேக் ஓவர்டன், ஆலி போப், ஆலி ராபின்சன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.
























