ஒலிம்பிக் போட்டிகளிலே மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படுவது பாராலிபிக். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது 16-வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர். இந்திய வீரர் மணீஷ் நர்வால் தங்கப் பதக்கமும், சிங்க்ராஜ் வெள்ளிப் பதக்கமும் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.

10 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் சிங்க்ராஜ் ஏற்கனவே வெண்கலம் வென்ற நிலையில் தற்போது மீண்டும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் பட்டியலில் 34-வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்நிலையில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
























