முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பின் காரணமாக சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த சில நாட்களாகவே உடல்நலப் பிரச்னைகளுக்கு ஆளாகியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாரடைப்பின் காரணமாக பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விஜயலட்சுமி
இதனையடுத்து பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்ற நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோரைச் சந்தித்து கூறினார். விஜயலட்சுமியின் உடலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
























