முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பின் காரணமாக சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த சில நாட்களாகவே உடல்நலப் பிரச்னைகளுக்கு ஆளாகியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாரடைப்பின் காரணமாக பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்ற `முதல்வர் மு.க.ஸ்டாலின் விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினார். அதே போல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயலட்சுமியின் உடல் இன்று மதியம் 2 மணியளவில் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட இருக்கிறது.

























