முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் அக்.28 -ல் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.
யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ஆன்மிக விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாவது நாளான நேற்று அரசியல் விழா நடைபெற்றது.
தமிழக அரசின் சார்பில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று பசும்பொன்னில் நடைபெற்ற அரசு விழாவில், காலை 9 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்தார். பின்னர் சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த தேவரின் புகைப்படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதேபோல் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ், ஐ.பெரியசாமி உள்ளிட்டோரும் கட்சி நிர்வாகிகளும் இருந்தனர்.
























