திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து அறநிலைத்துறை அதிகாரிகளை கடந்த 2018 ஆண்டில் அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு பிடிவராண்ட் உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து முன்னணி சார்பில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாக விருதுநகரரை சேர்ந்த நபர் பஜார் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
விருதுநகர் முதன்மை நீதிமன்றத்தில் அவ்வழக்கு நடைபெற்று வந்தது. நீதிமன்ற விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாததால் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர்நீதிமன்ற நீதிபதி பரம்வீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
























