தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட/உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 52.40 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாட்டில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 27,003 பதவியிடங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும்.
இந்த முதற்கட்ட வாக்குப்பதிவின் மதியம் 3 மணி நிலவரப்படி 52.40 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இத்தோ்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்களர்கள் தங்களது வாக்களித்துள்ளனர்.இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி 9 மாவட்டங்களில் 52.40 சதவிகித வாக்காளர்கள் இதுவரை தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
























