உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசுகளுக்கான அறிவிப்புகள் தற்போது வரிசையாக வெளியாகி வரும் நிலையில் 2021ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் பெரும் சாதனை புரிந்தவர்களுக்கு உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்க்யூரா மனாபே, ஜெர்மனியைச் சேர்ந்த கிளாஸ் ஹசில்மேன் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த ஜார்ஜியோ பரிசி ஆகிய மூன்று இயற்பியல் அறிவியலாளர்களுக்கு இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில், ஸ்க்யூரா மனாபே மற்றும் கிளாஸ் ஹசில்மேன் ஆகிய இருவருக்கும் பூமியின் காலநிலையில் இயற்பியல் மாதிரிக்காகவும் புவி வெப்பமடைதலின் மாறுபாட்டை அளவிட்டு நம்பத்தகுந்ததாக கணித்ததற்காகவும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஜார்ஜியோ பரிசிக்கு, உடற்கோளாறுகள் மற்றும் அதன் ஏற்ற, இறக்கங்களின் இடைவெளியைக் கண்டறிந்ததற்காக விருது வழங்கப்பட்டுள்ளது.
























