தமிழகம் முழுவதும், செப்.12 ஆம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாமில் 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கடந்த செப்.19ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில், 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. மூன்றாவது மெகா தடுப்பூசி முகாமில் 24 லட்சத்து 93 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர் அவர்களில் 10 லட்சம் பேர் 2-ம் தவணை செலுத்தியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் தற்போது, நான்காவது மாபெரும் தடுப்பூசி முகாம் இன்று (03.10-2021) தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலம் 25 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று 1,600 சிறப்பு முகாம்களில், சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
























