சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற செவிலியர் மற்றும் ஆய்வக நிபுணர்கள் தேவை என்கிற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் மற்றும் ஆய்வக நிபுணர்களுக்கான இடங்கள் காலியாக உள்ளன. மேலும், அலுவலக உதவியாளர் மற்றும் கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களும் காலியாக உள்ளன. எனவே காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
காலியாக உள்ள 50 பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில் தற்காலிக அடிப்படையில் 11 மாதங்களுக்கு பணியாற்ற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், சென்னை மாநகராட்சியின் வலைத்தளமான www.chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலமாக அக்டோபர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
























