நள்ளிரவு 12.52 மணியளவில் அசாமின் தேஜ்பூர் நகரில் இருந்து தென்மேற்கே 40 கி.மீ. தொலைவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
ரிக்டரில் 3.2 ஆக பதிவாகி உள்ள இந்நிலநடுக்கம், 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அருணாசல பிரதேசத்தின் பாங்கின் நகர் அருகே கடந்த 25ந்தேதி, ரிக்டரில் 4.5 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
























