போதிய அளவு மழைப்பொழிவு இல்லாத காரணத்தால், டெல்டா மாவட்டங்களில் பாசத்திற்கான தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. அதனால் மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
மேட்டூர் அணையில் இன்று நீர்திறப்பு 9 ஆயிரம் கன அடியில் இருந்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 73.49 அடியாக இருந்த நிலையில், இன்று அணையின் நீர் மட்டம் 73.67 அடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
























